சென்னை: இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். வங்க கடலில் கடந்த வாரம் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த நிலையில் அவ்வப்போது புதிதாக உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தினந்தோறும் கனமழை கொட்டிவருவதால் தமிழகமே வெள்ளக்காடக மாறியுள்ளது.